Erode By Election : ஈ.வி.கே.எஸ் தொடர்ந்து முன்னிலை - 12 மணி நிலவரம் இதோ!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் மொத்தம் பதிவான 397 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 2ஆவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ள நிலையில் நாம் தமிழர், தேமுதிகவுக்கு ஒரு தபால் ஓட்டு கூட கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து மின்னனு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
12 மணி நிலவரம் இதோ
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் -39,855
தென்னரசு -13,515
நாம் தமிழர் -1,620
தேமுதிக -290
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.