Fireworks accident: தருமபுரியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி
விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரழந்துள்ளர்.
தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரழந்துள்ளர். மேலும் சிவசக்தி என்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். இவரை காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடம் என்பதால் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்