தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்தை திருடிய சைபர் கும்பல்!

திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்தை திருடிய சைபர் கும்பல்!

Karthikeyan S HT Tamil
Oct 10, 2023 11:05 AM IST

DMK MP Dayanidhi Maran: திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் பணம் திருட்டு.
திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் பணம் திருட்டு.

ட்ரெண்டிங் செய்திகள்

பணத்தை திருடிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பி தயாநிதி மாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஹிந்தியில் பேசிய மர்ம நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

தயாநிதி மாறனின் மனைவி கடந்த 8ஆம் தேதி மலேசியாவில் இருந்ததாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும் ஓடிபி எண்ணை கொடுக்கவில்லை எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். ஓடிபி எண்ணை கொடுக்காமலே பணம் எடுக்கப்பட்டதாக தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தயாநிதி மாறன் புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

ஹிந்தியில் பேசிய நபர்கள் மூன்று முறை அழைத்த பின்னர், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.99,999 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடிபி எண்ணை கொடுக்காமலே திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருடு போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்