Senthil Balaji Vs ED: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சறுக்கல்! வழக்கை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
Senthil Balaji Vs ED: எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை சுட்டிக்காட்டி இந்த வழக்கை தள்ளி வைக்க கோரி மேலும் ஒரு மனுவை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.

Senthil Balaji Vs ED: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சறுக்கல்! வழக்கை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கை தள்ளிவைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
செந்தில் பாலாஜி மீதான வழக்குகள்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில்தான் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.