New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை - எப்போது அமல்?
New Rules: வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது மட்டுமல்லாமல் சாலையில் பைக் ரேஸ் செல்வதும், சாகசம் என்ற பெயரில் வீலிங் செய்வதும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. மேலும் மூன்று பேர் ஒரே வாகனத்தில் செல்வதும் விபத்தில் சிக்கிக்கொள்ளும் சூழலும் உருவாகி வருகிறது. ஆனால், சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனத்தை இயக்க அனுமதி இல்லை.
இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
RC ரத்து