Kanchipuram: திருமணம் பண்ணிக்கோ.. காதலியை கொலை செய்த காதலன் கைது
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, காதலன் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்: ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி தாரா. கணவர் இறந்த நிலையில் தாய் தாரா ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகள் ஷீபா காணவில்லை என அவரது தாயார் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் ஒரகடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை சேகரித்தனர்.
அதில் ஷீபாவிடம் கடைசியாக பசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (26) பேசியது தெரிந்தது. அவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் சாமுவேலும், ஷீபாவும் கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ளும்படி ஷீபா வற்புறுத்தி உள்ளார்.
இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷீபா காதலன் சாமுவேலுடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை அழைத்து சென்று அவரை டிஷர்ட் கொண்டு கழுத்து நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவரின் உடலை ஏரியின் மதகுப்பகுதியில் வீசிவிட்டு சென்று உள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய சாமுவேலை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்