Elephant Attack: மசினி யானை தாக்கி மேலும் ஒரு பாகன் பலி
Bagan killed: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
முதுமலை வளர்ப்பு முகாமில் இருந்த மசினி யானைக்கு இன்று காலை வழக்கம் போல் உணவு அளிக்க பாகன் அருகே சென்றுள்ளார். அப்போது பாகனை மசினி யானை திடீரென தாக்கியது. இதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மசினி யானை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் விழாவின் போது மசினி யானைக்கு எதிர்பாராத விதமாக மதம் பிடித்துள்ளது. இதையடுத்து, கோயில் வளாகத்தைச் சுற்றி சுற்றி ஓடியது. அப்போது, யானையை சமாதானப்படுத்தும் முயற்சியில், யானை பாகன் கஜேந்திரன் (50) என்பவர் ஈடுபட்டார். ஆனால், கோபத்தில் இருந்த யானை பாகனை தனது தும்பிக்கையால் தூக்கிப்போட்டு மிதித்தது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். மேலும், குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்