தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac: ‘டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’ திடீரென சென்னையிலிருந்து வெளியான அறிவிப்பு!

Tasmac: ‘டாஸ்மாக் கடைகள் மூடப்படும்’ திடீரென சென்னையிலிருந்து வெளியான அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Apr 28, 2023 11:52 AM IST

மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வருகிற மே 1ஆம் தேதி மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபான பாட்டில் விற்பனை
டாஸ்மாக் மதுபான பாட்டில் விற்பனை

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் வருகிற 1ஆம் தேதி (திங்கட்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். 

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”எனத் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பொது விடுமுறை தினங்களில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது வழக்கம். இதேபோல் தேர்தல் நேரங்களிலும், விடுமுறை விடப்படுவது உண்டு.

விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்