தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Namakkal: கள்ளக்காதலனுடன் உல்லாசம் - கணவனை மின்சாரம் பாய்ச்சி நெஞ்சில் மிதித்துக் கொன்ற மனைவி

Namakkal: கள்ளக்காதலனுடன் உல்லாசம் - கணவனை மின்சாரம் பாய்ச்சி நெஞ்சில் மிதித்துக் கொன்ற மனைவி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 10, 2023 08:38 PM IST

காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காகத் தனது கணவனை மின்சார ஷாக் கொடுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

கணவனைக் கொன்ற மனைவி கைது
கணவனைக் கொன்ற மனைவி கைது

ட்ரெண்டிங் செய்திகள்

கொடுமை தாங்க முடியாமல் கொலை செய்யும் பெண்கள் ஒரு புறம் இருக்க. குழந்தைகள் மற்றும் கணவன் இருக்கும் பொழுதே காதலில் ஈடுபடும் பெண்கள் குடும்பத்தையே கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. தனது காதலனுடன் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தனது கணவனைக் கொடூரமாக மனைவி கொலை செய்துள்ளார். மேலும் தனது இரண்டு குழந்தைகளையும் அனாதை ஆக்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான மோகன்ராஜ். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 28 வயதில் கீர்த்தனா என்ற மனைவியும், கவின், கரன்ஶ்ரீ உள்ளிட்ட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஓட்டுநர் மோகன்ராஜ் வாரம் இரண்டு முறை மட்டுமே பணி முடிந்து வீட்டிற்கு வருவார். இந்நிலையில் அதே பகுதியில் மாடு வைத்துக் கொண்டிருக்கும் கதிரேசன் என்ற இளைஞருக்கும், ஓட்டுநர் மோகன்ராஜ் மனைவி கீர்த்தனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக மோகன்ராஜ் ஒருநாள் விட்டு ஒரு நாள் பணிக்குச் சென்று வந்துள்ளார். இதனால் தன்னுடைய கள்ளக்காதலனைச் சந்திக்க முடியாமல் கீர்த்தனா மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா, கணவனின் சொத்தை அபகரிக்கவும், காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழவும், அவரது கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்று விட்டு மோகன்ராஜ் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்திவிட்டுப் படித்து உறங்கியுள்ளார். காலை நேரத்தில் மோகன்ராஜ் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து மோகன்ராஜ் சகோதரி சரண்யா அதற்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆயில் பட்டி காவல்துறையினரிடம் இது குறித்து சரண்யா புகார் அளித்துள்ளார். விசாரணையில், மோகன் ராஜன் மனைவி கீர்த்தனா மற்றும் அவரது கள்ளக்காதலன் கதிரேசன் உள்ளிட்ட இரண்டு பேரும் சேர்ந்து அவரை கொடூரமாகக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மோகன்ராஜ் கொலை செய்வதற்காக இரண்டு பேரும் 15 நாட்களாகத் திட்டம் தீட்டி வந்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி இரவு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, உயர் அழுத்த மின்சாரம் மூலமாக ஷாக் கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அப்போதும் மோகன்ராஜ் சாகாத காரணத்தினால், கீர்த்தனா இரக்கமின்றி கணவனின் நெஞ்சில் மிதித்து, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்