தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Girlfriend Who Poured Boiling Oil On A Young Man Near Erode

என்னுடன் தொடர்பில் இருந்துவிட்டு.. கொதிக்கும் எண்ணையை இளைஞர் மீது ஊற்றிய காதலி!

Divya Sekar HT Tamil
Mar 12, 2023 11:37 AM IST

ஈரோடு அருகே கொதிக்கும் எண்ணையை இளைஞர் மீது ஊற்றிய கள்ளக்காதலியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொதிக்கும் எண்ணையை இளைஞர் மீது ஊற்றிய காதலி
கொதிக்கும் எண்ணையை இளைஞர் மீது ஊற்றிய காதலி

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்திக்-மீனா தேவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்தது. இந்நிலையில் மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கார்த்திக்குக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் மீனா அதிர்ச்சி அடைந்து கார்த்திக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்தார். அதன்படி நேற்று மதியம் கார்த்திக் மீனா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு நீ எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தனது வீட்டில் கொதித்து கொண்டு இருந்த எண்ணையை கார்த்திக் மீது ஊற்றினார். இதில் அவரது கழுத்து, முகம், இடது கை தோள்பட்டையில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்கமுடியாமல் கார்த்திக் அலறி துடித்தார்.

பின்னர் அந்த தீக்காயத்துடன் தனது பைக்கில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பவானி போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவான மீனாவை போலீசார் தேடினர்.

அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பவானி, கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் பவானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது மீனா குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்ப டுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்