திருப்பதி சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் பலி
Tirupati: உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள புத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது ஆயில் டேங்கர் லாரி மீது கார் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கியது. இதில் காரில் பயணித்த 3 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகரி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்