தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  3 People Died In A Tragic Accident When A Car Collided With A Tanker Truck While Traveling To Tirupati

திருப்பதி சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் பலி

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 12, 2023 12:09 PM IST

Tirupati: உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Road Accident
Road Accident

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள புத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது ஆயில் டேங்கர் லாரி மீது கார் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கியது. இதில் காரில் பயணித்த 3 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகரி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்