Youth Arrest: சிறுமிக்கு 3 ஆண்டுகள் நடந்த கொடுமை - போலீஸ் அதிரடி!
ஆந்திரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அகமதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஹபீஸ் பாஷா. இவர் அதே பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கான அந்த சிறுமியைத் தொடர்ந்து பாஷா தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி ஆஸ்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் பாஷா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை சாதாரண வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனக் கூறி ஜாமினில் வெளியே வந்துள்ளார். பின்னர் சிறுமியின் ஆதரவாளர்களும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பாஷா மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் பாஷா சென்னைக்குத் தப்பி ஓடி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
பாஷா கடந்த 20 நாட்களாக தலைமுறையாக இருந்துள்ளார் பின்னர் காவல்துறையினர் அவரை சென்னையில் வைத்து கைது செய்தனர். தற்போது அவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சஞ்சல்குடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்