Sexual Assault: சிறுமியைக் கடத்திய இளைஞர் - கட்டிப்போட்டு 2 நாள் கொடூரம்!
அசாம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்தி இரண்டு நாட்கள் கட்டிப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் திப்ருகார் என்ற மாவட்டத்தில் பெபேஜியா கிராமத்தில் ஜனவரி 3ஆம் தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இது குறித்து சிறுமிகள் தயார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அத்தை பாரி தேயிலைத் தோட்டத்திற்கும் சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவு இல்லாமல் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன் அடுத்து பைஜான் அலி என்பவர் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் பைஜான் அலியிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதில்," நண்பர்கள் சிலர் பைஜான் அலிக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். போதையிலிருந்த பைஜான் அலி சிறுமியைக் கடத்திச் சென்று தேயிலைத் தோட்டத்தில் வைத்து இரண்டு நாட்களாக கை, கால்களைக் கட்டிப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பைஜான் அலியைக் கைது செய்துள்ளனர். மேலும் மதுபானம் வாங்கி கொடுத்த அவருடைய நண்பர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்