Shooting at Delhi's Saket court: தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் காயம்
Delhi: நீதிமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தலைநகர் தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளியன்று வழக்கறிஞர் உடையில் பலரும் நடமாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வழக்கறிஞர் உடையில் இருந்த ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினார். நீதிமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.மேலும் வழக்கறிஞர் ஒருவரும் காயம் அடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தானநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நடத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் குற்றப்பிண்ணணி கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்