தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நிர்வாணப்படுத்திய பஞ்சாயத்து தலைவர் - இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

நிர்வாணப்படுத்திய பஞ்சாயத்து தலைவர் - இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2023 12:20 PM IST

Andhra Pradesh: கடன் சிக்கலால் இளம் பெண்ணை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் சிக்கல்
கடன் சிக்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதை ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஆன அரசியல் பிரமுகர் பிரபாகர் என்பவரிடம் லட்சுமி பத்தாயிரம் ரூபாய்க் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை லட்சுமி திரும்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகக் கடந்த ஒன்றாம் தேதி அன்று லட்சுமியைத் தனது தண்ணீர் சுத்திகரிப்பு ஆளைக்குச் வருமாறு பிரபாகர் கூறியுள்ளார். இந்நிலையில் தனது தாய் அங்கம்மா மற்றும் சகோதரி அணுசூயம்மா ஆகியோருடன் லட்சுமி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பஞ்சாயத்துத் தலைவர் பிரபாகர் மற்றும் அவரது மனைவி பிரமிளம்மா ஆகியோர் கடனை திருப்பி கட்ட முடியாத காரணத்தினால் ஆபாச வார்த்தைகளால் அவர்களைத் திட்டியுள்ளனர். இதுகுறித்து லட்சுமியின் தங்கை அனுசூயம்மா தட்டி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் அனுசூயம்மாவின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது குறித்து அந்த இளம் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அனுசூயம்மா குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்க வேண்டும் என நினைத்துள்ளனர். ஆனால் ஊர் பெரியவர்கள், பிரபாகர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதால் ஊருக்குப் பல நன்மைகளைச் செய்வார். உங்களால் ஊருக்கு எந்த பையனும் கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு ஆதரவு ஏதும் கிடைக்காத காரணத்தினால் அனுசூயம்மா வீட்டிலிருந்த பூச்சிக் கொள்ளும் மருந்து கொடுத்து விட்டு அங்கேயே மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெடலகுரு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனுசூயம்மா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்