தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rss Rally Case: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி

RSS Rally Case: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2023 11:17 AM IST

RSS Rally Case in TN: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் குறித்து ஆராயப்பட்டு வந்ததன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் குறித்து அரசு ஆலோசிக்க முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை உறுதி செய்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்