தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ram Janmabhoomi: ‘ராமஜென்மபூமி மீட்கப்பட்டது, சிந்துவையும் மீட்டெடுக்கலாம்’: யோகி ஆதித்யநாத்

Ram Janmabhoomi: ‘ராமஜென்மபூமி மீட்கப்பட்டது, சிந்துவையும் மீட்டெடுக்கலாம்’: யோகி ஆதித்யநாத்

Manigandan K T HT Tamil
Oct 10, 2023 12:02 PM IST

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் ராம்லாலா மீண்டும் தனது கோவிலில் அமர்ந்து கொள்வார் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் இந்திய சிந்தி கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். (HT )
லக்னோவில் இந்திய சிந்தி கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். (HT )

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தூர் எம்பி ஷங்கர் லால்வானி, லத்னி குழுமத்தின் தலைவர் எஸ்என் லதானி, பிரபல சமூக சேவகர் ஸ்ரீராம் சப்லானி ஆகியோரையும் யோகி ஆதித்யநாத் பாராட்டினார். டெக் மஹிந்திரா இந்தியா தலைவர் ராஜேஷ் சந்திர ரமணி மற்றும் விஐபி இணை நிறுவனர் சோனாக்ஷி லக்கானி ஆகியோரையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுரவித்தார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம ஜென்மபூமியை மீட்டெடுக்க முடிந்தால், சிந்து நதியையும் (சிந்து நதி) மீட்டெடுக்க முடியும் என்று முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில்  பகவான் ராமர் மீண்டும் அவரது கோயிலில் அமர்ந்து அருள்பாலிப்பார் என்றும் அவர் கூறினார்.

லக்னோவில் இந்திய சிந்தி கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டில் அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.

சிந்தி சமுதாயம் அதன் வரலாற்றைப் பற்றி அதன் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்றார் யோகி.

பிரிவினைக்குப் பிறகு சிந்தி சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவரின் பிடிவாதமே நாட்டைப் பிரிப்பதற்கு வழிவகுத்தது என்றார்.

“நாட்டின் பிரிவினை நடந்தபோது லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவின் பெரும் பகுதி பாகிஸ்தானாக மாறியது. சிந்தி சமூகம் அவர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டியதினால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இன்றும் கூட, பயங்கரவாதத்தின் வடிவில் பிரிவினையின் சோகத்தின் சுமைகளை நாம் சுமக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

பயங்கரவாதம், தீவிரவாதம் அல்லது எந்தவித அராஜகத்தையும் எந்த நாகரீக சமூகமும் ஒருபோதும் மன்னிக்க முடியாது, என்றார்.

“மனிதகுலத்தின் நல்வாழ்வுப் பாதையில் நாம் முன்னேற வேண்டுமானால், சமூகத்தின் தீய போக்குகளுக்கு முடிவுகட்ட வேண்டும். நமது மத நூல்களும் அதே உத்வேகத்தை நமக்குத் தருகின்றன. மதிப்பிற்குரிய ஜூலேலால்ஜியாக இருந்தாலும் சரி, ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தாலும் சரி, மனிதர்கள் நலனுக்காக நல்லவற்றைப் பாதுகாப்பது மற்றும் தீமையை நீக்குவது பற்றி அனைவரும் பேசினர்” என்றார்.

“நாடு இருக்கும்போது மதமும் இருக்கும், மதம் இருக்கும்போது நாம் அனைவரும் இருக்கும் சமூகம் இருக்கிறது. நமது முன்னுரிமை அதற்கேற்ப இருக்க வேண்டும்'' என்றார்.

1947 பிரிவினை போன்ற ஒரு சோகம் மீண்டும் நிகழாமல் தடுக்க "தேசம் முதலில்" என்ற உறுதிமொழியை எடுக்குமாறு மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.

"நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் விளையாடும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

“இந்தியாவின் சனாதன தர்மத்தின் ஒருங்கிணைந்த பகுதி சிந்தி சமூகம். சிந்தி சமூகம் கடினமான சூழ்நிலைகளிலும் தனது முயற்சிகளால் முன்னேறியுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து எப்படி உச்சத்தை அடைவது என்பதற்கு சிந்தி சமூகம் ஒரு எடுத்துக்காட்டு என்றார் யோகி ஆதித்யநாத்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்