தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala: தோழியைக் கட்டி வைத்து கொடூரம் - அரை நிர்வாணமாக ஓடிய இளம்பெண் - இளைஞர் சூறையாட்டம்

Kerala: தோழியைக் கட்டி வைத்து கொடூரம் - அரை நிர்வாணமாக ஓடிய இளம்பெண் - இளைஞர் சூறையாட்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2023 10:46 AM IST

தோழியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறையாமல் நடந்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை ஒருபுறம் இருக்க, அதற்குப் பிறகு அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவம் மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.

பாலியல் வன்கொடுமை செய்ய பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு இதுபோன்ற கொடூரமான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

தனது தோழியை ஒருவர் கடத்திச் சென்று குடோனின் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கில் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான கிரண். இவருடைய பெண் தோழி ஒருவர், இன்னொரு ஆணுடன் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகத்தில் ஒன்றாகச் சாப்பிடச் சென்றுள்ளார்.

இதுகுறித்து குறித்து கிரணுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே உணவகத்திற்கு வந்த கிரண், அங்கிருந்து தனது தோழியை வீட்டில் விட்டு விடுவதாகப் பொய் சொல்லிக் கூறி தனது பைக்கில் கடத்திச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை பல கூட்டம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் கிரண் வெளியே சாப்பாடு வாங்கச் சென்றிருந்த நேரம் பார்த்து, அரைகுறை ஆடைகளோடு அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

பின்னர் அருகில் இருந்த வீடுகளில் சென்று உதவி கேட்டுள்ளார். உடனே அந்த இளம் பெண்ணுக்கு ஆடைகள் கொடுத்துவிட்டு, இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திவிட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் கிரணையும் காவல்துறையினர் கைது செய்தனர். நண்பனாகப் பழகி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கிரண் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்