Morocco earthquake: மொராக்கோ துயரம்-நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மொராக்கோவில் உள்ள மாரகேஷ் பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் தகர்ந்து தரை மட்டமான. இரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்