தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Incident: மணிப்பூர் கொடூரம்.. 'குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி' - முதல்வர் பிரேன் சிங்

Manipur Incident: மணிப்பூர் கொடூரம்.. 'குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி' - முதல்வர் பிரேன் சிங்

Karthikeyan S HT Tamil
Jul 20, 2023 12:01 PM IST

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.

ட்ரெண்டிங் செய்திகள்

மனிதகுலத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீ தொலைவில் இந்த மாவட்டம் உள்ளது. இது தொடர்பாக மே 18ஆம் தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு அம்மாநில முதல்வர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள் இதயத்தை கனக்கச் செய்கிறது. இது மனித குலத்திற்கு எதிரான குற்றம். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு முழுமையான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

மேலும், அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மீதான இந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்