தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : என்ன கொடுமை இது.. போதை மருந்துக்காக பெற்ற மகளை விற்ற தாய்.. அடுத்த நாளே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சோகம்!

Crime : என்ன கொடுமை இது.. போதை மருந்துக்காக பெற்ற மகளை விற்ற தாய்.. அடுத்த நாளே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சோகம்!

Divya Sekar HT Tamil
Apr 28, 2023 11:27 AM IST

போதை மருந்துக்காக தாய் தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பராகுவே சிறுமி கொலை
பராகுவே சிறுமி கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி ஆரேலியா சலினாஸ் போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் பாலடைந்த வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி சடலத்தை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சிறுமியை தோளில் சுமந்தபடி இளைஞர் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை மருந்துக்காக சிறுமியை அவரது தாயே விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியின் வீட்டருகில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது வீட்டில் இருந்து இளைஞர் வலுக்கட்டாயமாக சிறுமியை கொண்டு செல்லப்படுவதும், அந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் பதிவாகியுள்ளது.

மேலும் அந்த இளைஞர் சிறுமியை முகத்தில் தாக்குவதும், பின்னர் தோளில் போட்டுக்கொண்டு காட்டுப்பாதைக்கு செல்வதும் பதிவாகி இருந்தது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சிறுமியின் தாயார் ஆரேலியா சலினாஸ் என்பவரை அடித்தே கொல்ல திட்டமிட்டு அவர் வீட்டுக்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னரே போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் ஆரேலியா சலினாஸ் காதலன் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய17 வயது சிறுவன் ஒருவனும் கைதாகியுள்ளான்.

சிறுமியின் இறுதிச்சடங்குகளுக்கு உள்ளூர் மக்கள் சுமார் 300 பேர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனிடையே, சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பாழடைந்த வீட்டை அப்பகுதி மக்கள் கோபத்தில் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நாட்டில பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்