தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covid 19: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

Covid 19: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

Aarthi V HT Tamil
Apr 22, 2023 10:38 AM IST

இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31, 258லிருந்து, 5,31,300 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66, 170 லிருந்து 67, 556 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,69,684 லிருந்து 4,48,81,877 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று 10 ஆயிரத்து 765 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த வீடு திரும்பி உள்ளனர்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்து உள்ளது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக ஏப்ரல் 14 ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.

தமிழ் நாட்டில் நேற்று 6, 744 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 15 நாட்களில் மட்டும் தினசரி பாதிப்பு 300 க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அதை தாண்டி உள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,660 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 492 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ் நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்