Aditya-L1 Mission:விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1; இந்தியா புது பாய்ச்சல்
சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று நண்பகல் 11:50 மணிக்கு சரியாக விண்ணில் ஏவப்பட்டது
அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் - 3 திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை நிலைநிறுத்தியது. அதுவும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே. இந்நிலையில், இஸ்ரோ சூரியனில் இருக்கும் காந்தப் புயலை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்-1 என்ற விண் ஆய்வுக்கூடத்தை வடிவமைத்துள்ளது. அது சரியாக இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நண்பகல் 11:50 மணிக்கு ஏவப்பட்டது. இதனை பிஎஸ்எல்வி C-57 என்ற ராக்கெட் கொண்டு செல்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த ஆய்வுக்கூடமானது பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் 1 என்ற இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த லெக்ராஞ்சியின் பாயிண்ட் என்பது சூரியனின் ஈர்ப்பு விசையும், பூமியின் ஈர்ப்பு விசையும் விலகும் புள்ளியாகும். இதற்காக இன்று ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 என்ற விண் ஆய்வுக்கூடமானது,125 நாட்கள் பயணித்து, அந்த லெக்ராஞ்சியன் பாயிண்டை அடைகிறது. அதேபோல், இந்த ஆய்வுக்கூடமானது, சுமார் 5 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.
இந்த ஆய்வுக்கூடமானது சூரியனின் காந்த துகள் வெளியேற்றம், சூரியனின் கரும்புள்ளிகள், வெப்பநிலை, காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. சூரியனை ஆய்வு செய்ய முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னரே,தங்கள் விண்கலத்தைச் செலுத்திய நிலையில், இந்தியா முதன்முறையாக, ஆதித்யா எல்-1 என்ற இந்த விண்கலம் என்கிற விண்வெளி ஆய்வுக்கூடத்தை வானில் செலுத்தியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்