Crime: ஆபாச வீடியோ - 40 வயது பெண் - ஒன்றரை ஆண்டு பாலியல் வன்கொடுமை - கொடூரத்தின் உச்சம்
வீடியோவை வைத்து மிரட்டி 40 வயது பெண்ணை ஒன்றரை ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாரபட்சம் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த குற்றம் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
வயசு வித்தியாசம் பாராமல் சிறுமிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் என அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். மிரட்டி சில குடும்பப் பெண்களைப் பலர் பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். அந்த வகையில் 40 வயது பெண்ணை ஒன்றரை வருடம் ஒரு வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போப்பாலின் அசோகா கார்டன் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவரை வாலிபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒரு துணிக்கடை நடத்தி வந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு வசித்து வந்த விஜய் பால் என்பவர் அடிக்கடி துணிக்கடைக்குச் சென்று வந்துள்ளார்.
40 வயதான துணிக்கடை உரிமையாளர் பெண்ணுக்கும், விஜய் பாலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜய் பாலிடம், இந்த அசோகா கார்டன் பகுதியில் ஒரு நிலத்தை வாங்க விரும்புகிறேன் என 40 வயது பெண் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்துக் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பெண்ணை அசோகா கார்டனில் ஒரு நிலத்தைக் காட்டுவதாகக் கூறி விஜய் பால் தன்னுடைய வாடகை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை அந்த வீட்டில் வைத்து விஜய் பால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் இந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களது குடும்ப உறுப்பினருக்கு அனுப்பி விடுவேன் என அந்த பெண்ணை விதைப்பால் மிரட்டி உள்ளார்.
அதற்குப் பிறகு பலமுறை அந்த பெண்ணை விஜய் பால் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் பால் அந்த பெண்ணோடு இருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது, கண்ணீருடன் நடந்த அனைத்தையும் அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் உயர் அலுவலர்கள் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவை வைத்து மிரட்டி ஒன்றரை ஆண்டு 40 வயது பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்