தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  West Bengal : வன்முறை களமாக வெடித்த மேற்கு வங்கம்.. சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழப்பு.. 70 ஆயிரம் போலீசார் குவிப்பு!

West Bengal : வன்முறை களமாக வெடித்த மேற்கு வங்கம்.. சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழப்பு.. 70 ஆயிரம் போலீசார் குவிப்பு!

Divya Sekar HT Tamil
Jul 08, 2023 11:17 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைப்பெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

வன்முறை களமாக வெடித்த மேற்கு வங்கம்
வன்முறை களமாக வெடித்த மேற்கு வங்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் வலுவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். அதே நேரம் அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் பர்கானாஸ் மாவட்டத்தின் பிர்காச்சாவில் சுயேச்சை வேட்பாளரின் பூத் ஏஜென்ட் அப்துல்லா கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்குப் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பீபியின் கணவர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்தை நடத்தினர்.

பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அங்கு பல்வேறு வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 65 ஆயிரம் துணை ராணுவப் படையினரும், மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை அச்சத்திற்கு மத்தியிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்குச்சாவடிகளில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் தான், வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. கூச்பெஹார் அடுத்த சீதாயில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடி அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வாக்குச் சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடிபிடித்து இருக்கிறது. இதுவரை அங்கு நடைபெற்ற மோதல்களில் 12 வயது சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்