White Discharge in Women : பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் நோய் – எளிய வீட்டு வைத்தியங்கள் என்ன?
சில வேளைகளில் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று காரணமாகவோ அல்லது பாலியல் நோய்க்காரணமாகவோ இத்திரவம் அதிகமாக சுரக்கும். துர்நாற்றத்துடன் மஞ்சள் திரவமாக வெளிப்படும்போது பல அறிகுறிகளை ஏற்படுத்தி, ஒரு நோயாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம் . அப்போது கட்டாயம் மருத்துவம் செய்ய வேண்டும்.
வெள்ளைப்படுதல் என்பது 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்னை ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
கருப்பையிலிருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதையை ஈரமாகவும், நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும் சளி போன்ற திரவம் இயற்கையாகவே பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படுவது. இந்த திரவம் மாதவிலக்கின் முன்போ, பின்போ அல்லது கருமுட்டை உடையும் நாட்களிலோ (OVULATION PERIOD) அதிகமாக சுரக்கும்.
அப்படி ஏற்படும் கசிவால் அரிப்போ, துர்நாற்றமோ ஏற்படாது. இதற்கு மருத்துவமும் தேவையில்லை. இவ்விதமான சுரப்பு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.
சில வேளைகளில் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று காரணமாகவோ அல்லது பாலியல் நோய்க்காரணமாகவோ இத்திரவம் அதிகமாக சுரக்கும். துர்நாற்றத்துடன் மஞ்சள் திரவமாக வெளிப்படும்போது பல அறிகுறிகளை ஏற்படுத்தி, ஒரு நோயாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம் . அப்போது கட்டாயம் மருத்துவம் செய்ய வேண்டும்.
வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுவதற்கு காரணங்கள் –
பாக்டீரியா கிருமித்தொற்று
காண்டிடியாஸிஸ் எனப்படும் பூஞ்சை தாக்குதல்
டிரைகோமோனாஸ் எனப்படும் ஒட்டுண்ணி தொற்று
கிளாமிடியா கொனேரியா, மேக வெட்டை கிருமிதொற்று
ஜெனிடல் ஹெர்பஸ் என்ற அக்கி ஏற்படுத்தும் வைரஸ் தொற்று
பெல்விக் அழற்சி நோய்
கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாய் அழற்சி
வயது முதிர்வு
நாப்கீன்கள்
ராசாயன பொருட்களை கொண்டு கருப்பாதையை கழுவுதல்
கருத்தடைக்காக பயன்படுத்தப்படும் களிம்புகள்
நீரிழிவு மற்றும் ரத்த சோகை நோயால் ஏற்படும் உடல் எதிர்புச் சக்தி குறைதல் என பல்வேறு காரணங்கள் உள்ளன.
அறிகுறிகள் -
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி
பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு மற்றும் சிவந்து காணப்படுதல்
பிறப்புறப்பில் புண் அல்லது கொப்புளங்கள்
சளி போன்ற கசிவு, அதிகரித்து தயிர் போலவோ, ரத்தம் கலந்தோ வெளியேறுவது
உடல் வலி, இடுப்பு வலி, மலக்கட்டு போன்றவை காணப்படுதல்
துவக்கத்திலே கண்டறியவில்லையென்றால் கருப்பையில் அழற்சியை ஏற்படுத்தும். மலட்டுத்தன்மை போன்ற பின்விளைவுகள் ஏற்படும்.
வெள்ளைப்படுதல் நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை
பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வேண்டும்.
பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் நாப்கின்களை அல்லது சுத்தமான காட்டன் வகை துணியை நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இக்காலத்தில் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
உள்ளாடைகளை பருத்தித் துணிகளால் ஆனதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். நைலான் வகைகளை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்கள் கருத்தடை சாதனங்களை பிறப்பு உறுப்பில் வைத்திருந்து உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். அது சரியான நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மருத்துவர் ஆலோசனையில்லாமல் நோய் தடுப்பு மருந்து மற்றும் கரு அழிவு மருந்து, மாதவிடாய் தள்ளிப்போக மருந்து உட்கொள்ளக்கூடாது.
எளிய வீட்டு சிகிச்சை முறைகள் -
பருத்திப் பிஞ்சு 2 எடுத்து வெள்ளாட்டுப்பால், பசும்பாலில் கலந்து அரைத்து காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யானை நெருஞ்சில் 5 கிராம் இலையை அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கலந்து காலை ஒரு வேளை 10 முதல் 15 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கீழா நெல்லியை 5 கிராம் அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.
வாரம் ஒருமுறை தவறாமல் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும்.
உணவில் கீரை, காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள், அதிக காரம், உப்பு சார்ந்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்
இளநீர், தயிர், மோர், தண்ணீர் இவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அம்மான் பச்சரிசி மூலிகை கற்கம் தினசரி காலை 5 கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்
உடலில் மாறுபட்ட அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவம் மேற்கொள்வது சிறந்தது.
தகவல் – Dr. காமராஜ், சித்த மருத்துவர், திருச்சி.
டாபிக்ஸ்