தீக்காயங்கள் விரைவில் சரிசெய்ய வேண்டுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
Skin Burns : சமைக்கும் போது சிறு தீக்காயங்கள் ஏற்படும். அவற்றை விரைவில் குறைக்க சில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன.

தோல் தீக்காயங்கள் பொதுவானவை. சமைக்கும் போது, மெழுகுவர்த்தியை ஏற்றும் போது, தோல் காயமடைகிறது.பொதுவாக லேசான தீக்காயங்கள் என்பது ஒரு வாரம் அல்லது இரண்டு மூன்று நாட்களிலேயே தானாக சரியாகிவிடும். இதனால் உடலில் வடு ஏற்படாது. உங்களுக்கு ஒரு சிறிய தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி கழுவலாம். குளிரான பொருளை பயன்படுத்துவது தீயினால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
தீக்காயங்கள் விரைவில் குறைக்க சில குறிப்புகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சில பாரம்பரிய முறைகள் உள்ளன. சில வகையான மூலிகைகள் அந்த காயங்களை வேகமாக குறைக்கும்.
தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது விரைவாக எரிந்து குளிர்ச்சியடைகிறது. எரிந்த தோலில் கொப்புளங்கள் மற்றும் கறைகளை தடுக்க உதவுகிறது. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் போதும்.