தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : மாமியார் - மருமகள் வாக்குவாதத்தால் இத்தனை தீமைகளா?

Relationship : மாமியார் - மருமகள் வாக்குவாதத்தால் இத்தனை தீமைகளா?

Priyadarshini R HT Tamil
Nov 05, 2023 10:30 AM IST

உங்களை கிண்டல் செய்யும் மாமியாரிடம் வாக்குவாதம் செய்வது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளும் மனஅழுத்தம். ஏன் நீங்கள் அதை செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : மாமியார் - மருமகள் வாக்குவாதத்தால் இத்தனை தீமைகளா?
Relationship : மாமியார் - மருமகள் வாக்குவாதத்தால் இத்தனை தீமைகளா?

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகரிக்கும் வாய்ப்பு

உங்கள் மாமியாரிடம் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அது திடீரென பூதாகரமாகிவிடும். அதிக சூட்டை கிளப்பி, பிரச்னையை உருவாக்கிவிடும். அது காயப்படுத்தும் வார்த்தைகளை விட வைத்து, விரும்பத்தகாத செயல்களை செய்ய வைத்துவிடும். ஒரு சொல் பல மடங்காகி பிரச்னையை பெரிதுபடுத்திவிடும். எனவே மாமியாரிடம் எந்த விஷயத்துக்காகவும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மன அழுத்தம் மற்றும் பதற்றம்

அடிக்கடி வாக்குவாதங்கள் செய்தால், அது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். இது இருவருக்குமே மன மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இது நீண்ட நாள் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்கோளாறுக்கு வழியை ஏற்படுத்திவிடும். இதனால் ரித்த அழுத்தம் ஏற்படும். எனவே வாக்குவாதத்தை தவிர்ப்பது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

கணவன்

உங்கள் கணவருடனான உங்கள் உறவை எப்படி உள்ளது என்பதை பாருங்கள். உங்கள் மாமியாருடனான விவாதத்தால் கணவன்-மனைவி உறவும் பாதிக்கப்படும். அவர்கள் இடையில் மாட்டிக்கொண்டு உங்களுக்கும் உதவ முடியாமல், அவர்களுக்கும் உதவ முடியாமல் தவிப்பார்கள். எனவே உங்கள் உறவு முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையே பிரச்னைகளை ஏற்படுத்தி, உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.

நற்பெயர்

சில நேரங்களில் தவிர்க்க முடியாத விவாதங்கள் ஏற்படும்போது அமைதியாகவே விவாதியுங்கள். வீட்டில் அனைவர் முன்னிலையிலும் சண்டை போட்டுக்கொள்ளதீர்கள். இது அனைவர் மத்தியிலும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.

குழந்தைகளிடம் பாதிப்பு

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இது அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி குடும்பத்தில் எந்த விவாதத்தின்போதும் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். இது அவர்களுக்கு ஆரோக்கியமற்ற இல்லத்தை உருவாக்குகிறது. இதனால் அவர்களின் மன நலன் பாதிக்கப்படும். எனவே குழந்தைகளுக்காக நீங்கள் விவாதங்களை கைவிடுவது நல்லது.

முடிவில்லா பிரச்னைகளை உருவாக்கிவிடும்

இந்த விவாதங்கள் அடிக்கடி வேறு சில முன்பு நடந்த பிரச்னைகள் கிளறுவதற்கு வழிவகுக்கும். உணர்வுப்பூர்வமாக நீங்கள் வெடித்தல், அவர்களின் பிரச்னைகள், அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுதல் என ஒருவரைப்பற்றி ஒருவர் மேலும் பேசிக்கொண்டே செல்லும் வழிதானேயொழிய, சமாதான முயற்சி எட்டப்படாமலே போய்விடும். இதனால் பிரச்னைகளுக்கு முடிவு என்பதே கிடைக்காது. இதனால் குடும்பத்தில் அமைதி குலைந்து, குடும்பம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

தேவையற்றவை

எப்போதும் பிரச்னைகளை வாக்குவாதங்கள் தீர்ப்பதில்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரச்னைகள் எப்போதும் வீட்டு சூழலை மோசமாக்குகிறது. எனவே தெளிவாக உரையாடி அந்த பிரச்னையை முடித்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டுமேயொழிய, அதை வளர்க்க நினைக்கக்கூடாது. விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அவை முற்றி வாக்குவாதங்களாகி, சண்டைகளாவிடக்கூடாது. வீட்டில் அமைதி நிலவ வேண்டுமெனில் கட்டாயம் மாமியாரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

WhatsApp channel

டாபிக்ஸ்