Piles Remedy : ஒரே வாரத்தில் மூல நோயை ஓடஓட விரட்டும் வழி! வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட பலன் நிச்சயம்!
Piles Remedy : ஒரே வாரத்தில் மூல நோயை ஓடஓட விரட்டும் வழி! வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட பலன் நிச்சயம்!
மூலநோயால் சிலர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வை கொடுக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்
மூலம் மட்டுமின்றி, அல்சர், மலச்சிக்கல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேவையான பொருட்கள்
படிகார கல்
நீரை சுத்தம் செய்யும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையும் குறைவு. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளது. அதை திருஷ்டிக்கு பயன்படுத்தலாம். இது எதிர்மறை ஆற்றலை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டதால் வீட்டின் வெளியே தொங்கவிடலாம். இதை உணவிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரும பாதிப்புக்களை சரிசெய்யும், சருமத்தில் உள்ள புண்களை சரிசெய்யும், வயிற்றுப்புண்களை ஆற்றும், குடலை சுத்தம் செய்து, குடல் புண்களை ஆற்றும். மூலத்தை முற்றிலும் குணமாக்கும் தன்மை கொண்டது.
ஆனால் படிகாரத்தை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. மருத்துவ குணம் நிறைந்து உப்பும், படிமமும் நிறைந்ததுதான் படிகாரக்கற்கள். இது இரட்டை சல்பேட் உப்பு, சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
படிகார கற்களை வைத்து பலவகை நோய்களை குணப்படுத்த முடியும்.
கல்லில் ஒரு சிறிய துண்டை எடுத்து அடுப்பில் தோசைக்கல்லில் சேர்த்து உருகி வரவேண்டும். அது மீண்டும் ஒரு கல் பதத்திற்கு வரும். அதன் நீர்த்தன்மை முழுவதும் வற்றிவிடவேண்டும். பின்னர் நீங்கள் இதை உபயோகிக்கலாம்.
இதை ஒரு உரலில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப்பொடியை நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு பூவன் வாழைப்பழம் அல்லது எந்த வாழைப்பழத்தை வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளலாம். அதை வெட்டி, ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதில் தூவி தேன் சேர்த்து சாப்பிடவேண்டும்.
படிகாரத்தை சிட்டிகை அளவுக்கு மேல் சேர்த்துக்கொள்ளக்கூடாது. இதை இரவு படுக்கச்செல்லும் முன் அல்லது மதிய உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு வாரம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் மூன்று நாட்களிலே நல்ல வித்யாசம் தெரியும். மூலத்தால் ஏற்படக்கூடிய வலி, புண்கள் அனைத்தும் குணமாகும். அல்சர் சரியாகும். மலச்சிக்கல் இருக்காது. 7 நாள் தொடர்ந்து சாப்பிட மூலம் முழுமையாக குணமாகும்.
மூலநோய்
ஆசணவாய்ப்பகுதி அல்லது மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டால் வருவது மூலநோய். இதனால் அந்தப்பகுதியில் உங்களுக்கு சிரமம் ஏற்படும். இது பல்வேறு அளவுகள் மற்றும் இடங்களில் ஏற்படும்.
மூலத்தில் உள் மூலம், வெளி மூலம் என்ற வகைகள் உள்ளது. உள்மூலம் என்பது மலக்குடலுக்கு உள்ளே ஏற்படுவது. அது வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியாது. வெளி மூலம் என்பது ஆசணவாய்க்கு வெளியே ஏற்படுவது.
மூலநோயில் பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றாது. அதுவே குணமடையும். அதிகரிக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஆசணவாயை சுற்றி, வலிநிறைந்த கட்டிகள் ஏற்படும். ஆசணவாயில் எரிச்சல், அரிப்பு மற்றும் அசவுகர்யங்கள் தோன்றும். மலம் கழித்தவுடன் அசவுகர்யம் ஏற்படும். மலத்தில் ரத்தம் வெளியேறும்.
கடுமையாகிவிட்டால்,
அதிகளவில் ரத்தம் வெளியேறி, அனீமியாவை ஏற்படுத்தும்.
தொற்று, ஆசனவாயில் புண், ஆசனவாய்க்கு ரத்த ஓட்டம் தடைபடுவது ஆகியவை ஏற்படும்.
இவைதான் மூலநோயின் அறிகுறிகள். ஒரு வாரத்துக்கு மேல் இவை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்