தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Biriyani : பன்னீர் பிரியாணி! இது புதிய சுவையில் அச்த்தும்!

Paneer Biriyani : பன்னீர் பிரியாணி! இது புதிய சுவையில் அச்த்தும்!

Priyadarshini R HT Tamil
Dec 11, 2023 12:23 PM IST

Paneer Biriyani : பன்னீர் பிரியாணி! இது புதிய சுவையில் அச்த்தும்!

Paneer Biriyani : பன்னீர் பிரியாணி! இது புதிய சுவையில் அச்த்தும்!
Paneer Biriyani : பன்னீர் பிரியாணி! இது புதிய சுவையில் அச்த்தும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பன்னீர் – 200 கிராம்

நெய் - 3 ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

மராத்தி மொக்கு -2

அன்னாசிப்பூ -2

ஜாதிபத்திரி – 1 ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2

கீறிய முழு பச்சை மிளகாய் -4

நறுக்கிய தக்காளி -2

கிராம்பு -5

முந்திரி -12

ஏலக்காய் - 3

பிரியாணி இலை - 1

பட்டை - 4

இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி மற்றுத் புதினா- ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு.

(பிரியாணி அரிசி பாஸ்மதி என்றால் 15 நிமிடங்களும், சீரக சம்பா என்றால் 30 நிமிடங்களும் நீரில் ஊற வைக்கவேண்டும்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி சூடாக்கவேண்டும்.

சூடானவுடன், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதி பத்திரி, ஏலக்காய், மராத்தி மற்றும் அன்னாசி மொக்கு, முந்திரி சேர்த்து வதக்கவேண்டும்.

அவை வதக்கியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். பின் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து மென்மையாக வரும்படி வதக்கவேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி-பூண்டு விழுது, புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அரிசி ஒரு பங்கு எனில் தண்ணீர் 2 பங்கு எனும் அளவில் ஊற்ற வேண்டும். பின்னர் அதை நன்றாக கலக்கி பாத்திரத்தை மூடி போட்டு மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும்.

அது நன்றாக கொதித்தவுடன், ஊற வைத்த பிரியாணி அரிசியை நீரை வடித்துவிட்டுச் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கி மூடி வைக்கவேண்டும்.

இது 15 நிமிடங்கள் வெந்த பின்னர், மூடியைத் திறந்தால் தண்ணீர் சுண்டி, வெள்ளை பிரியாணி வெந்திருக்கும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வறுத்து, பிரியாணியில் இந்த ஸ்டேஜில் சேர்க்க வேண்டும். அதை ஒருமுறை கிளறிவிட்டு பிரியாணியை 10 நிமிடம் தம்மில் வைக்கவேண்டும்.

தம் போடுவது எப்படி?

வீட்டிலுள்ள தோசைக்கல்லை (உபயோகம் இல்லாத கல்லாக இருந்தாலும்) மிதமான தீயில் அடுப்பில் வைத்து சூடாக்கவேண்டும். அதன் மீது பிரியாணியோடு பாத்திரத்தை வைக்கவேண்டும்.

பிரியாணி பாத்திரத்தை தட்டையான மூடியால் இறுக மூடவேண்டும். இந்த மூடி மேல் இன்னொரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீர் வைத்து அதையும் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். இதை 10 நிமிடம் வைத்தால் போதும்.

பிரியாணி நன்றாக தம் ஏறியிருக்கும். இப்போது மூடியைத் திறந்தாலே மணம் வீட்டையே அசர அடிக்கும். சைவப் பிரியர்கள் சைவக் குருமா வகைகள், ஜாம், தயிர் பச்சடி போன்றவற்றோடும், அசைவப் பிரியர்கள் அசைவக் குழம்பு வகைகள், சுக்கா, தால்ஸா, தயிர்பச்சடி போன்றவற்றுடன் இதை ருசிக்கலாம்.

இந்த பன்னீர் பிரியாணிக்கு, மஷ்ரூம் க்ரேவி செம்ம காம்போவாகும். தக்காளி இதில் ஆப்ஷன் தான். தேங்காய், கசகசா, முந்திரி, பால் சேர்த்து அரைத்தும் இதில் சேர்க்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்