Headache: தலைவலிக்கு மாத்திரையா?- இந்த உணவுகளை சாப்பிட்டால் வலி பறந்துடும்
தலைவலி ஏற்பட்டால் மாத்திரைகள் பதிலாக சில உணவுகளை சாப்பிட்டால் வலி குறைந்துவிடும்.
தலைவலி மிகவும் பொதுவான பிரச்னை. ஆனால் அது வந்துவிட்டால் ஒரு வேலையும் நம்மால் செய்ய முடியாது. அதனால் இந்த வலி ஏற்பட்டால் உடனே பலரும் மாத்திரை எடுத்து போட்டு கொள்கிறார்கள். மருந்துகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இது போன்ற வலிகளை சமாளிக்க சில உணவுகள் சாப்பிட்டாலே தலைவலி நீங்கிவிடும். அப்படிப்பட்ட சில உணவுகளைப் பற்றிய தகவல்களை
ஆப்பிள்
தலைவலி பிரச்னைகள் வந்தால் உடனே ஆப்பிள் சாப்பிடுங்கள். இதில் பொட்டாசியம், இரும்பு நார் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்து உள்ளது. இதனை உட்கொள்வதால் தலைவலி நீங்கும். ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் தலைவலியை போக்குகிறது.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் பருகினால் தலைவலி குறையும். தேங்காய் தண்ணீரில் பல வகையான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் உடலை ஹைட்ரேட் செய்கிறது. பலவீனம் நீங்கி தலைவலி நீங்கும்.
மோர்
தலைவலி வந்தால் மோர் அல்லது தயிர் சாப்பிடுவதும் தலைவலியைக் குறைக்கும். சில சமயங்களில் உடலில் நீர்சத்து குறைவதால் தலைவலியும் ஏற்படும். தயிரில் கால்சியம் உள்ளது.
இஞ்சி
இஞ்சி சாப்பிடுவதால் தலைவலி நீங்கும். அதில் உள்ல நிவாரணி குணம் தலைவலியில் இருந்து நிவாரணம் தரும். இதை டீயாக குடிக்கலாம் அல்லது காய்கறிகளில் பயன்படுத்தலாம். இஞ்சி தலையில் இருக்கும் ரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதை சாப்பிட்டால் தலைவலி குறையும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்