Diabetes: 'சுகர் அதிகமா இருக்கா?' - இதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்!
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய இந்த 5 தவறான வாழ்க்கை முறை தேர்வுகளைத் தவிர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் திட்டமிடுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
நாம் ஒரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவது பிரதானமானது.
உட்கார்ந்து பணிசெய்பவர்களுக்கு, நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. தவிர, ஜங்க் ஃபுட், தாமதமான இரவு உணவு மற்றும் உண்டவுடன் தூங்குவது ஆகிய தவறான வாழ்க்கை முறையும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
நீங்கள் நீரிழிவு நோயாளிகளாகவோ அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களாகவோ இருந்தால், பின்வரும் பழக்கங்களிலிருந்து விடுபடுமாறு ஆயுர்வேத டாக்டர் சவாலியா பரிந்துரைக்கிறார்:
1. உட்கார்ந்த வாழ்க்கை முறை:
நீங்கள் உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்து பணியாற்றுபவர்களாக இருந்தால் உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா செய்தல், தவிர நீரிழிவு நோயாளிகளுக்கு 20 நிமிட மூச்சுப்பயிற்சி ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்க அல்லது உங்கள் சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த தினமும் மேற்கூறிய பயிற்சிகளை 1 மணி நேரம் செய்து உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது முக்கியம்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல்:
ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உணவும் பெரும் பங்கு வகிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒவ்வொரு உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வெள்ளை சர்க்கரை, மைதா (பதப்படுத்தப்பட்ட உணவுகள்), மூல உலர் பழங்கள், தயிர் மற்றும் கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது ஒருவரை நீரிழிவு நோயாளி ஆக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை நன்மை தருகிறது. பசும்பால் மற்றும் நெய்யை மிதமாக உட்கொள்ளலாம்.
சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை உட்கொள்ளலாம். உலர்ந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவற்றை உட்கொள்வதற்கு முன்பு அவற்றை ஊறவைக்கவும் அல்லது வறுக்கவும்.
3. தாமதமான இரவு உணவு:
இரவில் தாமதமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை சீர்குலைத்து நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும். "முடிந்தால் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது நல்லது. வேலை அட்டவணை அனுமதிக்கவில்லை என்றால், இரவு 8 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது" என்று டாக்டர் சவாலியா கூறுகிறார்.
4. சாப்பிட்ட உடனேயே தூங்குவது:
"அதிக சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு பகல் தூக்கம் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இது உடலில் அதிக கப தோஷத்தை அதிகரிக்கிறது (மற்றும் ஆயுர்வேதத்தில் நீரிழிவு / மதுமேகம் ஒரு கபஜ் நோயாக கருதப்படுகிறது). இது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கிறது. எனவே 100% பகல் தூக்கம் தவிர்க்கப்பட வேண்டும். இரவில் கூட, இரவு உணவிற்கு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தூங்க பரிந்துரைக்கப்படுகிறது (சூரிய அஸ்தமனத்திற்குள் இரவு உணவை உட்கொள்வது சிறந்தது)" என்று நிபுணர் கூறுகிறார்.
5. நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது:
ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்றாமல், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை முற்றிலும் எடுத்துக்கொள்வது இளம் வயதிலேயே உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்தும் என்று டாக்டர் சவாலியா கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்