ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!
ஒரு வாரம் வரை கெடாது, செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுக்க வசதியான ரெசிபி. அதற்கு இந்த கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பை செய்து வைத்துக்கொள்ளுங்கள் .

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் முக்கியமான ஒன்று கறிவேப்பிலை. ஆனால் உணவுடன் சேர்த்து சமைக்கும்போது நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் கறிவேப்பிலை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. கல்லீரலை காக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பக்கவிளைவுகளை தடுக்கிறது. காயங்களை ஆற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிரான உட்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் பயிரடப்படுகிறது. இத்தனை நன்மைகளை அள்ளி வழங்கும் கறிவேப்பிலையில் பூண்டு மற்றும் மிளகுடன் சேர்த்து குழம்பு வைத்தால் அது ஒரு வாரம் கெடாது. அதை செய்வது எப்படி என்று பாருங்கள். அந்த குழம்பை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளையும் தருகிறது.
தேவையான பொருட்கள்
பூண்டு – 100 கிராம் (தோல் உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
மிளகு – ஒரு ஸ்பூன்