'நான் தான் ஐஸ்வர்யா ராய் பையன்.. கல்யாணத்துக்கு முன்னாடியே பொறந்துட்டேன்'.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நபர்
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் விவாகரத்து விஷயம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, ஒருவர், தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என கூறிக்கொண்டு வருவது சர்ச்சைகளை அதிகரித்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் மாபெரும் நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்களுக்கு மேல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்த வண்ணமாகவே உள்ளது.
வீடியோவால் வெடித்த விவகாரம்
இந்நிலையில், தன்னை ஐஸ்வர்யா ராயின் மகன் எனக் கூறிக் கொண்டு இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து விஷயம் மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், " நான் ஐஸ்வர்யா ராயின் மகன். என் பெயர் சங்கீத் குமார். ஐஸ்வர்யா ராய் 15 வயதாக இருந்த போது நான் பிறந்தேன். லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் என்னை IVF முறையில் பெற்றெடுத்தார். பின் அவரது பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் என்னை வளர்த்தனர். அப்போது, நான் பிறந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் மொத்தமாக அழித்துவிட்டனர், இப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.