VetrimaaranSpeech:‘யாரும் விடுதலை படத்தை எடுக்க சொல்லல’ வெற்றிமாறன் பளார்!
நாங்கள் இவ்வளவு தூரம் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம் என்றால் யாரும் சொல்லியும் எடுக்கவில்லை;உங்களுக்கு இந்தக்கதையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதற்காக நாங்கள் இந்த கதையை சொன்னோம். அதற்கான கஷ்டங்களை ஏற்றுக்கொண்டோம்
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படம். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். 30 -03-2024 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரம் சிலர் விடுதலை படம் குறித்தான தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் இந்த படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், “ இந்த மாதிரியான படத்தை எடுப்பதில் இருக்கக்கூடிய ஈஸியான விஷயம் என்னவென்றால் இந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதே. அது ஒரு தனி ஆளு அல்லது ஒரு சின்ன குழுவோ எடுக்கக்கூடிய முடிவு.
நாங்கள் இவ்வளவு தூரம் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம் என்றால் யாரும் சொல்லி எடுக்கவில்லை. உங்களுக்கு இந்த கதையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதற்காக நாங்கள் இந்த கதையை சொன்னோம். அதற்கான கஷ்டங்களை ஏற்றுக்கொண்டோம்.
இந்த மாதிரியான ஒரு படத்தை பத்திரிக்கையாளர்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைத்ததே இதில் முக்கியமான விஷயம். இந்த படத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்த படத்தினுடைய உள்நோக்கத்தை புரிந்துகொண்டு, இந்த படத்தை விமர்சனம் செய்ததற்கு நன்றி. இந்த படத்தை இவ்வளவு அபரிவிதமாக கொண்டாடி ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி.
நல்லவர்களை கதாநாயகர்களாக வைத்து படங்கள் வந்து வெகு நாட்களாகி விட்டது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னர், ராஜா சார் தான் இந்த படத்தை பார்த்து இந்த படம் ஒரு மிக முக்கியமான படம் என்று சொன்னார். அத்துடன் உனக்கு என்ன மாதிரியான இசை வேண்டுமோ அதை நாம் செய்து தருகிறேன் என்று சொல்லி முழுவதுமாக என்னை ஊக்குவித்தார். அதற்காக நான் இந்த இடத்தில் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்