Urvashi Rautela: ரூ. 190 கோடிக்கு வீடு வாங்கினாரா லெஜெண்ட் பட நடிகை? தாயார் அளித்த விளக்கம்
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலா ரூ. 190 கோடி மதிப்பு ஆடம்பர வீட்டில் குடிபெயர்ந்து இருப்பதாக உலா வரும் தகவல்கள் உண்மையில்லை என நடிகையின் தாயார் மீரா ரவுதெலா தெரிவித்துள்ளார்.
ஊர்வசி ரவுதெலா மும்பை ஜூஹு பகுதியில் சொகுசு வீடு குடிபெயர்ந்து இருப்பதாக உலா வரும் தகவல் பற்றி மீரா ரவுதெலா கூறியிருப்பதாவது: "இதுமுற்றிலும் போலியான தகவல். அப்படியொரு நாள் வரும் என அல்லாவை பிராத்திக்கிறேன். அனைவரின் பிரார்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பறந்து விரிந்த அழகான தோட்டம், தனிப்பட்ட ஜிம், மிகப் பெரிய அளவில் பின்பகுதியில் ஓபன் ஸ்பேஸ் என அமைந்துள்ளது. இந்த வீடு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா வீடு அருகே உள்ளது.
ஆடம்பரமான இந்த வீட்டில் ஊர்வசி ரவுதெலா இந்த வீட்டுக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும், சத்தமில்லாமல் அவர் இந்த வீட்டை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவர் இந்த வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளாரா அல்லது வாடகைக்கு செல்கிறாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 7 முதல் 8 மாதங்களாக தனது கனவு இல்லத்தை தேடும் முயற்சியில் நடிகை ஊர்வசி ரவுதெலா இருந்ததாகவும், பாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் ஜூஹு பகுதியில் வீடு பார்த்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அந்த பகுதியில் அ்மிதாப் பச்சன், கஜோல் மற்றும் அஜ்ய் தேவ்கன் தம்பதியினர், ஜான் ஆபிரஹாம், ஹிர்திக் ரோஷன், அக்ஷய் குமார் மற்றும் டுவிங்கில் கண்ணா, அனில் கபூர் உள்பட பலரும் குடியிருந்து வருகிறார்கள்.
பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் ஊர்வசி ரவுதெலா, தமிழில் தி லெஜெண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு, கன்னடம், பெங்காலி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அத்துடன் பல்வேறு மியூசிக் விடியோக்களையும் பிரபல பாடகர்களுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த 76வது கேனஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கவர்ச்சியான உடை அணிந்து வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
2015ஆம் ஆண்டில் மிஸ் திவா பட்டத்தை வென்றவர் ஊர்வசி ரவுதெலா. பாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து இவர் மும்பையில் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா வீட்டுக்கு அருகில் ரூ. 190 கோடி மதிப்பில் ஆடம்பரமான பங்களா வாங்கி, குடிபெயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்