மாநாடு வேலை மும்முரம்..மாரடைப்பால் உயிரிழந்த கட்சி முக்கிய நிர்வாகி! விஜய் இரங்கல் - கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்
தவெக முதல் மாநில மாநாடு வேலை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகியும், புதுச்சேரி மாநில செயலாளருமான சரவணன் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த கட்சி முக்கிய நிர்வாகி! விஜய் இரங்கல் - கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்
தளபதி விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகளில் ஈடுபட்ட வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி செயலாளர் சரவணன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இறப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் இரங்கல்
புதுச்சேரி செயலாளர் சரவணன் இறப்புக்கு, தவெக கட்சி தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர்.