Thavamai Thavamirundhu: பாண்டியிடம் டிராமா போட்ட மலர் -தவமாய் தவமிருந்து அப்டேட்
தவமாய் தவமிருந்து சிரீயலின் இன்றைய எபிசோட்டில்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து.
ட்ரெண்டிங் செய்திகள்
தொடர்ந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கடந்த வாரம் ராஜா, உமா, மலர், தணிகா, ரேவதி என அனைவரும் கூட்டு சேர்ந்து மார்க் மற்றும் சீதாவை பிரிக்க திட்டம் போட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடக்கப் போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது செய்த தவறுகளை உணர்ந்து மலர், பாண்டியிடம் மன்னிப்பு கேட்பது போல் நடிக்க, மார்க், பாண்டி அம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
பிறகு மலர் சின்னுவிடம் மன்னிப்பு கேட்க அவர் மலர் மீது கோபப்படுகிறாள். இதனால் மார்க் மற்றும் சீதா இடையே மனக்கசப்பு உருவாகிறது.
அதன் பிறகு ரேவதி நகையை சிதாவிடம் கொடுக்க, மார்க் சந்தேகப்பட்டு அதை ஒரசி பார்க்க பின் அது ஒரிஜினல் தான் என்று தெரிய வருகிறது. மார்க், சீதாவை சந்தேகப்படுவது போல செய்த இந்த விஷயம் மேலும் அவர்களுக்கு இடையேயான மனக்கசப்பை அதிகப்படுத்துகிறது.
இதையும் படிங்க
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் தவமாய் தவமிருந்து சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாக உள்ள சீரியலை இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்