தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial: அண்ணன்களுக்கு அட்வைஸ் செய்த சக்தி.. குணசேகரனை ஒரே கேள்வியால் ஆஃப் செய்த வைத்த ஜனனி

Ethirneechal Serial: அண்ணன்களுக்கு அட்வைஸ் செய்த சக்தி.. குணசேகரனை ஒரே கேள்வியால் ஆஃப் செய்த வைத்த ஜனனி

Aarthi Balaji HT Tamil
Mar 09, 2024 01:05 PM IST

Ethirneechal Today Promo: எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி கடந்த்தல் தொடர்பாக ஜனனி கேட்ட கேள்விக்கு வாய் திறக்க முடியாமல் குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் ஆடிப் போய் கோபம் அடைந்தார்.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் தர்ஷினியை காரில் அழைத்து வரும் ஜீவானந்தம், செக்போஸ்டில் வைத்து போலீஸ் இருப்பதை பார்க்கிறார். அவர்கள் உன்னை அம்மாவிடம் சேர்த்துருவாங்க என சொல்லி கிளம்ப பார்க்கிறார். அப்போது அவரை தப்பிக்க விட்ட போலீஸ் போன் செய்து அந்த பொண்ணு உன்னிடம் இருக்குற வரை தான் நீங்க பாதுகாப்பாக இருக்க முடியும் என சொல்கிறார். இதனால் தர்ஷினியை அழைத்து கொண்டு காட்டிற்குள் செல்கிறார் ஜீவானந்தம். இதனால் அவர் தான் கடத்தி வைத்து இருக்கிறார் என குணசேகரன் மாற்றிவிட்டார்.

எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தர்ஷினி ரவுடிகளிடமிருந்து தப்பித்ததை நினைத்து குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார்.

தர்ஷினியை கடத்திய ரவுடி கும்பல்களில் ஒரு அணி சிக்கியது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோவில் கதிர், ஞானம் எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து சக்தி சத்தம் போடுகிறார்.

மேலும் நமக்குள்ள ஒற்றுமை இல்லனா அந்த ஆளை எதுவுமே பண்ண முடியாது என அவர்களுக்கு சக்தி அட்வைஸ் செய்கிறார்.

அடுத்ததாக குணசேகரன், ஜனனியிடம் குடும்ப கெடுக்குறதே நீதான் என சத்தம் போடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜானகி எல்லா பிரச்னைக்கும் காரணம் நானா, நீங்களா? என்று சாட்டையால் அடித்தது போன்று கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டு விசாலாட்சி அதிர்ச்சியில் பார்க்கிறார். ஜனனியின் கேள்விக்கு வாய் திறக்க முடியாமல் குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் ஆடிப் போய் நின்று கோபமாக பார்க்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்