தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: புதிய சீதா..வெளியே வந்த சூர்யா.. மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Seetha Raman: புதிய சீதா..வெளியே வந்த சூர்யா.. மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Jul 05, 2023 11:55 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ஸ்டேஷனலில் சென்று ஆஜரான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ராஜசேகர் மீராவுக்கு போன் செய்து சீதா எங்கே என்று கேட்க அவ இன்னும் வீட்டிற்கு வரலையா என்று மீரா அதிர்ச்சியாக கேட்க ராஜசேகர் கோபப்பட்டு ராமிடம் போன் கொடுக்க சொல்கிறார். மீரா போன் கொடுக்க ராஜசேகர் சீதாவுக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா உங்களை வரதட்சணை கேசில் உள்ள போட்டுடுவ என்று மிரட்டுகிறார்.

அடுத்ததாக ராம் சோகமாக கார்டனில் உட்கார்ந்திருக்க அங்கே வரும் மதுமிதா என்னாச்சு என்று கேட்க ராம் சீதா இல்லாமல் என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது, என் அம்மாவுக்கு பிறகு என் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்தது சீதா தான், அவளால் தான் நான் சந்தோசமாக இருந்தேன் என வருத்தப்பட மதுமிதா நான் இந்த வீட்டுக்கு வந்திருக்கவே கூடாது, எல்லா பிரச்னையும் என்னால தான் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள்.

இதனை தொடர்ந்து ராஜசேகர் சேதுபதிக்கு போன் செய்து மகாவிடம் போன் கொடுக்க சொல்ல அவர் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்று பேச ராஜசேகர் உங்க எல்லாரையும் என் பொண்ணை வரதட்சனை கொடுமை பண்ணி கொன்னுட்டிங்கனு ஜெயில்ல போட்டுடுவேன் என எச்சரிக்க மகா உங்க பொண்ணு வந்துடுவா என சொல்லி போனை கட் செய்து விடுகிறாள்.

அதன் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் சூர்யா தன்னுடைய அண்ணன் சரவணனிடம் எப்படி வெளியே வந்தேன் என்று கேட்க சீதா எல்லாம் நான் தான் செய்தேன் என்று சொல்லி ஜெயிலுக்கு போய் விட்டதாக சொல்கிறான், அதோடு உன்னையும் மதுவையும் சேர்த்து வைக்கணும்னு தான் அவ இப்படி பண்ணா, அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா என்று சொல்கிறார்.

மதுவை கூட்டிட்டு நாம வேற ஊருக்கு போய்டலாம், இந்த ஊர்ல இருக்க வேண்டாம் என்று சொல்ல சூர்யா மகா வீட்டுக்கு வருகிறான், சூர்யாவை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறாள், ஆனால் எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் சூர்யாவிடம் நல்லவள் போல பேசி எப்படி வெளியே வந்த என்று கேட்க சீதா உள்ளே சென்று விட்ட விஷயத்தை சொல்கிறான்.

இதனையடுத்து மது வெளியே போய் இருப்பதாக சொல்லி இவர்களை உள்ளே உட்கார வைக்கும் மகா உடனடியாக ஏதாவது பண்ணியாக வேண்டும் என திட்டம் போடுகிறாள். மறுபக்கம் ராம் ஸ்டேஷனுக்கு வந்து ஜெயிலில் இருக்கும் சீதாவை சந்திக்க புது சீதா அறிமுகமாகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்