தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shruti Haasan: ‘என்ன மன்னிச்சிருங்க.. அத பத்தி’ - பிரேக் அப் குறித்து வாய் திறந்த ஸ்ருதி காதலர்!

Shruti Haasan: ‘என்ன மன்னிச்சிருங்க.. அத பத்தி’ - பிரேக் அப் குறித்து வாய் திறந்த ஸ்ருதி காதலர்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 27, 2024 04:07 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே.

ஸ்ருதிஹாசன் உடனான பிரேக் அப் குறித்து காதலர்!
ஸ்ருதிஹாசன் உடனான பிரேக் அப் குறித்து காதலர்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்பின், 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகியப் படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 

இதற்கிடையே, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியான சுருதிஹாசன், அனகனகா ஓ தீரடு, ஓ மை ஃபிரெண்ட், கபர் சிங், பலுப்பு, ராமய்யா வஸ்தவ்வய்யா, எவடு, ரேஸ் குர்ரம், அகடு, ஸ்ரீமந்துடு, பிரேமம் (தெலுங்கு), கிராக், பிட்ட கதைலு, வக்கீல் ஷாப், வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா, ஹாய் நானா, சலார் பார்ட் 1 ஆகியப் படங்களில் நடித்தார். 

நடிகை ஸ்ருதி ஹாசன், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஸ்ருதி ஹாசனுடன், அவர் லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார். இது கமல்ஹாசனுக்கும் தெரியும். இருப்பினும், தனது மகளின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடாத தந்தையாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரேக் அப் செய்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்தனர். கூடவே, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருந்தனர். 

இது குறித்து விசாரித்த போது, அவர்கள் கடந்த மாதமே பிரிந்து விட்டதாகவும், தனிப்பட்ட கருத்துகளில் இருந்த முரண்பாட்டால், இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் இதனை உறுதிபடுத்த, சாந்தனுவை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டு இருக்கிறது. அதற்கு சாந்தனு, “ என்னை மன்னித்து விடுங்கள். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

முன்னதாக, ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்த “இனிமேல்” பாடல் அண்மையில் வெளியானது. லோகேஷின் புதிய அவதாரத்தால், பாடல் வரவேற்பை பெற்றாலும், கண்டெண்ட் இல்லாத காரணத்தால் பாடல் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அந்தப்பாடல் குறித்து சுருதிஹாசனும், லோகேஷ் கனகராஹூம் பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டி இங்கே!

இது குறித்து லோகேஷ் பேசும் போது, “ என்னுடைய திரைப்படங்களில் காதலுக்கான இடம் கம்மியாக இருப்பதையும், நான் கதாநாயகிகளை கொன்று விடுவதையும் குறிப்பிட்டு, இவர் எப்படி இப்படியான ஒரு ரொமான்டிக் பாடலில் நடித்தார் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

நான் அவர்கள் வேறு எதற்காகவோ அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனையடுத்து அவர்கள் விஷயத்தை சொன்னார்கள். நான் ஸ்ருதிஹாசனை சந்தித்தேன். அவரை பார்த்த உடனேயே நான் சிரித்து விட்டேன்.

அதன் பின்னர் பாடலை கேட்டேன். கொஞ்சம், கொஞ்சமாக ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது என்று தோன்றியது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏதாவது கேட்டு வந்தால், அதற்கு என்னால் நோ சொல்ல முடியாது.” என்று பேசினார்.

ஸ்ருதிஹாசன் பேசும் பொழுது, “நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருப்பேன். இவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார். கொஞ்சம் விட்டால் இவள் எரிச்சலை கிளப்பி விடுவாள் என்று ஓகே சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இதுதான் கான்செப்ட் என்று அவர் புரிய வைத்தார். நான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை. நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற சோனுக்குள்ளும் நான் என்றைக்கும் சென்றது கிடையாது.

அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்தான ஸ்கிரிப்ட் புக் எனக்கு கொடுக்கப்பட்டது. நான் படித்தேன். பாடலின் இயக்குநர் துவாரக்கை சந்தித்தேன். மொத்த குழுவையும் என்னை சந்திக்க வைத்தார்கள்.

தினசரியும் அந்த டைரக்ஷன் டீம் என்னை சந்தித்துக் கொண்டே இருந்தது. நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டது ‘ஒய் மி’ என்பதுதான். ஷூட் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட, நான் கான்ஃபிடன்ட்டாக இல்லை.

அங்கே சென்று என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த டீமுடன் நான் தினசரி சந்தித்த சந்திப்புகள், எனக்கு ஒரு விதமாக செளகரியமான நிலையை கொடுத்து, இந்த முடிவை எடுக்க வைத்தது. யாரும் காரி துப்பாத அளவிற்கு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்