Roja Serial: கோயிலில் ரோஜா சீரியல் நாயகிக்கு திடீர் திருமணம்
ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி திடீரென கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு தான் மவுஸ் அதிகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் சீரியல்கள் மூலம் அவர்கள் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன் மூலம் கிடைக்கும் புகழால் எளிதாக வெள்ளிதிரைக்கு சென்று விடுகின்றனர். நடிகர்களை விட நடிகைகளே எளிதாக இரண்டு மூன்று சீரியல்களில் நடித்து விட்டு படங்களில் நடிக்க சென்று விடுகின்றனர். அதுவும் நாயகிகளை முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் சீரியல் என்றால் சொல்லவே வேண்டாம்.
இதனிடையே பிரபல தொலைக்காட்சியில் ரோஜா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அர்ஜுன் சார், அர்ஜுன் சார்.. என்று அதில் அழைத்து பெண்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். இவர் வெல்கம் டு அமெரிக்கா, கிக் டு, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து இருந்தார். ஆனால் அதில் கிடைக்காத புகழ் இவருக்கு சின்னத்திரை தேடி கொடுத்தது.
இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா தற்போது திடீரென திருமணம் செய்திருக்கிறார். மிகவும் எளிமையாக முருகன் கோயிலில் இவரது திருமணம் நடைபெற்றிருக்கிறது.
ராகுல் வர்மா என்ற தொழில் அதிபரை மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் கரம் பிடித்திருக்கிறார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் எதற்காக இந்த திடீர் திருமணம், ஏன் கோயிலில் திருமணம் செய்தார் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்