Pawan Kalyan: ஆந்திர மக்களின் செழிப்பு..! வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்
ஆந்திர மக்களின் செழிப்பு வேண்டி வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் பவண் கல்யாண். தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான இவர், ஜன சேனா என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போது, ஆந்திரா மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்துடன், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கூட்டணி வைத்து 21 தொகுதிகளில் போட்டியிட்டது. இதையடுத்து போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.
துணை முதலமைச்சர் பதவி
இதைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் நடிகர் பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஆந்திர மக்களும், மாநிலமும் வளம் பெற வேண்டி 11 நாள்கள் பவன் கல்யாண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.