Priyanka Mohan: உன்னைவிட சின்னப் பொன்னு.. அவங்ககிட்ட இருந்து கத்துக்கோங்க.. விமர்சனத்திற்கு உள்ளான நடிகை
Priyanka Mohan: செல்ஃபி எடுக்க வந்தவரிடம் முகத்தை கோவமாக காண்பித்ததாகக் கூறி நடிகை பிரியங்கா மோகனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், உணமையில் என்ன நடந்தது என்பதை நடிகை பிரியங்கா மோகன் விளக்கியுள்ளார்.

இயக்குநர் நெல்சன்- நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படம் மூலம் தழிழ் மொழி ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் தனது முதல் படத்தில் வெளிப்படுத்திய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
செல்ஃபியால் வந்த வினை
இதையடுத்து அவருக்கு, தமிழில் மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினார். இதனால், தற்போது அவர் சென்னையிலேயே வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, அவரிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால், பிரியங்கா மோகன் அந்த நபரை கோபமாக பார்த்ததுடன், செல்ஃபி எடுக்கவும் மறுத்துள்ளார். பின் அந்த நபரை கண்டித்து விட்டு சிரித்தவாறு முகத்தை வைத்துக் கொண்டு செல்ஃபியையும் எடுத்துளளார். பின் போட்டோ எடுத்து முடித்தவுடன் மீண்டும் முகத்தை கோபமாக வைத்துள்ளார்.