Thangalaan Release: கடன் சிக்கல்..அவசரமாக செலுத்தப்பட்ட தொகை..!தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
கடன் சிக்கல் விவகாரத்தில் நீதிமன்றம் சொன்ன தொகையை அவசரமாக செலுத்தப்பட்ட நிலையில் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகவுள்ளது.

விக்ரம் - பா. ரஞ்சித் கூட்டணியில் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் தங்கலான் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட பணத்தை கட்டியதால் தங்கலான் வெளியீட்டுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கலான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சிக்கல்
சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார்.
இதையடுத்து அர்ஜூன்லால் சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.