தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga: பூஜாவால் மயக்கமான சரண்யா.‌. ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி

Meenakshi Ponnunga: பூஜாவால் மயக்கமான சரண்யா.‌. ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Mar 02, 2023 12:43 PM IST

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் பொருட்களை உடைக்கும் பூஜாவிடம் சரண்யா வாக்குவாதம் செய்ய பூஜா சரண்யாவை தள்ளிவிட சரண்யா கட்டிலில் இடித்து மயக்கம் அடைகிறாள்.

அங்கே வந்த சக்தி சரண்யாவுக்கு உதவி செய்ய இதை செல்வமுருகனும் பார்த்து பூஜாவை கண்டிக்கிறார். சக்தி சரண்யாவுக்கு முதல் உதவி செய்ய அந்த நேரத்தில் ரங்கநாயகி வந்து சக்தி தான் சரண்யாவை அடித்து விட்டால் என்று நினைத்துக் கொண்டு சக்தியை திட்டுகிறாள்.

பிறகு பூஜா என்று தெரிந்து பூஜாவை எச்சரித்து செல்கிறாள். பூஜா சக்தியிடம் உன்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றி காட்டுவேன் என்று கூறிவிட்டு செல்கிறாள்.

மறுபக்கம் மருத்துவமனையில் கோகிலா கார்த்திக் வேறு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

மீனாட்சி வீட்டில், யமுனா சோகமாக இருப்பதை பார்த்து மீனாட்சி உனக்கு வேறு இடத்தில் கல்யாணம் செய்து வைக்கிறேன். அந்த கோகிலா வீட்டுக்கு மட்டும் நீ போகக்கூடாது என்று உறுதியாக சொல்ல யமுனா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு யமுனாவும் சாந்தாவும் கல்யாணமான விஷயத்தை எப்படி மீனாட்சியிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்