நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் சொல்லுங்க.. திருமண ஆவணப்பட விவகாரம்.. தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி
நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் சொல்லுங்க.. திருமண ஆவணப்பட விவகாரம்.. தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தில் தனது அனுமதியின்றி ’நானும் ரவுடிதான்’ படக்காட்சிகள் இடம்பெற்றதற்கு இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனுஷ் வக்கீல் நோட்டீஸ்
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
நயன்தாரா அறிக்கை
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.