வீட்டு நாயை வேட்டை நாய் ஆக்கிவிட்டோம்.. இது ஆரம்பம் தான்.. எச்சரித்த வைரமுத்து
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

வீட்டு நாயை வேட்டை நாய் ஆக்கிவிட்டோம்.. இது ஆரம்பம் தான்.. எச்சரித்த வைரமுத்து
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மழை நீர் தேங்கும் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாகவே கோவை, சேலம், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வீடுகள், கோயில்கள், பேருந்துகள் மழையில் சிக்கி பெரும் சேதங்களை சந்தித்து வருகிறது.