Karthigai Deepam : நட்சத்திராவின் சூழ்ச்சியால் தீபாவை சந்தேகப்படும் கார்த்தி!
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் நட்சத்திரா ரூமின் கதவை உடைக்க போன சமயத்தில் நட்சத்திரா கதை திறந்து தூங்கி விட்டதாக நாடகம் போட எல்லோரும் கலைந்து போக கார்த்திக். சந்தேக பார்வையுடன் அவளை பார்க்கிறான்.
மறுபக்கம் தீபா கார்த்தியுடன் காரில் வந்து இறங்கியதை பார்த்த மைதிலி கல்யாணத்தை வச்சிருக்கும் போது இதையெல்லாம் பார்த்து யாராவது தப்பா பேசுனா என்ன பண்ணுவ என திட்டுகிறாள்.
அடுத்து கார்த்திக் தன்னுடைய ரூமில் யோசனையில் இருக்க அங்கு வரும் நட்சத்திரா நான் அந்த பார்டிக்கு போய் இருந்தேன், உங்களை பார்த்ததும் ஒளிந்து கொண்டேன் என சொல்கிறாள். மேலும் அபிராமி அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் தவறாக புரிந்து கொள்வார்கள் என்று தான் இப்படி செய்ததாக சொல்கிறாள்.
மேலும் இந்த விஷயத்தை தீபா தானே உங்களுக்கு சொன்னா? அவ உங்களை காதலிக்கிறாள். இந்த வீட்டு மருமகளாக ஆசைப்படுகிறாள். அதற்காக தான் இதையெல்லாம் செய்கிறாள் என சொல்ல கார்த்தியும் யோசிக்க தொடங்குகிறான்.
இதனால் நட்சத்திரா கார்த்திக் யோசிக்க தொடங்கிட்டான், இனி நமக்கு பிரச்சனை இல்லை என சந்தோஷப்படுகிறாள்.
அடுத்து எல்லோரும் கல்யாணத்துக்கு தயாராகி மண்டபத்துக்கு கிளம்ப ஹாலுக்கு வர புது கேரக்டராக வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்