தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவுடன் வந்து இறங்கிற அபிராமி…கார்த்திகை தீபம்

Karthigai Deepam: தீபாவுடன் வந்து இறங்கிற அபிராமி…கார்த்திகை தீபம்

Aarthi V HT Tamil
Feb 27, 2023 12:54 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடல் இருந்து தீபா அபிராமியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வரும்போது அபிராமி கோவிலுக்கு போக ஆசைப்பட தீபா கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள்‌.

அங்கு கோவிலில் உள்ள ஒரு மரத்தில் நாம் ஒரு விஷயத்தை வேண்டிக் கொண்டு தேங்காய் கட்டினால் அந்த விஷயம் நல்லபடியாக நடக்கும் என தெரிய வர அபிராமி தன்னுடைய மகன் கார்த்திக் கல்யாணம் நல்லபடியாக நடக்க தேங்காய் கட்ட வேண்டும் என ஆசைப்படுகிறாள். இதனால் தீபா அபிராமிக்காக கார்த்திக்கின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு தேங்காய் கட்டுகிறாள்.

மறுபக்கம் வீட்டுக்கு வரும் கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான். தீபாவும் இல்லாததால் அதிர்ச்சி அடையும் கார்த்தி தீபாவுக்கு போன் போட போன் வீட்டிலேயே இருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு தீபா அபிராமியை கூட்டிக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்க கார்த்தி ஆச்சரியப்படுகிறான்.

பிறகு ஏன் என்னிடம் சொல்லவில்லை என அபிராமியிடம் கேட்க நீ ஆபீஸ் விஷயமாக வெளியே போயிருந்த அதனால் உன்னிடம் சொல்லவில்லை. இந்த பூக்கார பொண்ணு என்ன ரொம்ப பத்திரமா பாத்துக்கிட்டா என சொல்லி என் புள்ள கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் என தீபா தன்னுடைய பெயரை எழுதிய பத்திரிகை எடுத்து அபிராமி தீபாவுக்கே கொடுக்கிறாள்.

அதன் பிறகு வீட்டுக்கு ஒவ்வொருத்தராக வர ஐஸ்வர்யா வீட்டுக்கு வரும்போது வெளியில் தீபாவின் செப்பல் இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்து உள்ளே வர உள்ளே தீபா இல்லாமல் இருக்கிறாள். பிறகு அபிராமியின் கண்ணில் கட்டு போட்டு இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என விசாரிக்க அபிராமி நடந்த விஷயங்களை சொல்கிறாள்.

பூக்கார பெண் தன்னை ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றதாக அபிராமி சொன்னதில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா உடனடியாக அந்த பூக்கார பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரிக்க அபிராமி சொன்னது அந்தப் பெண் இல்லை என தெரிய வருகிறது. இதனால் தீபா தங்களுடைய வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை ஐஸ்வர்யா உறுதி செய்கிறாள்.

மறுபக்கம் துரை ஸ்டேஷனில் இருக்க அங்கு வரும் நட்சத்திரா துரையை பார்த்து விஷயத்தை கேட்க தீபாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும் அவளுடன் அபிராமி இருந்ததும் அபிராமி கண்ணில் கட்டு போட்டிருந்த விஷயத்தையும் சொல்ல ஐஸ்வர்யாவுக்கு வச்ச குறியில் அபிராமி சிக்கி கொண்டது நட்சத்திராவுக்கு தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்